Friday, April 27, 2018

ஒரு கேள்வி


வறட்சியின் கோரப் பிடியில்
சிக்கி சின்னாபின்னமானது
பெருந்துயரம் .
ஆனால் நிறைந்து கொண்டு இருக்கிறது.
ஊழல் பெருச்சாளிகள் ,
மொள்ளமாரிகள்
முடிச்சவிக்கிகளால்.
பிணத்தின் நெற்றியிலும்
கூட காசு எடுத்தவனால்,
வாய்க்கரிசி கேட்பவர்களால் ,
ஆம்.நிறையவே நிறைந்து கொண்டு இருக்கிறது
அரசின் அனைத்து துறையிலும்
கடைந்தெடுத்த அயோக்கியர்களை
எம்மக்களுக்கு சேவை செய்யவென ,
எங்கெங்கிருந்தோ தூக்கி போடுகிறார்கள்
ஆகவே கனவான்களே!
இயற்கையால் வஞ்சிக்கப்பட்டவர்களின்
ஏக பிரதிநிதியாய் இறைஞ்சிக் கேட்கிறேன்..
ஒரே ஒரு கேள்வி...
தண்டனைக்குள்ளான அரசாங்க ஆபிசர்களை
ராமநாதபுரத்திற்கு பணிமாறுதல் செய்கின்றீர்களே
#உண்மையில் #தண்டனை #யாருக்கு?

No comments:

Post a Comment