Friday, April 27, 2018

கள்ளவாளி என்னும் கடவுள்

கள்ளவாளி எனும் கடவுள் .
***********************************
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகே உள்ளது எஸ்.டி.சேதுராஜபுரம் என்ற கிராமம் .இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.தொடர் வறட்சியின் காரணமாக சிலர் வளைகுடா நாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஊரில் இருந்து வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் கொக்காடி செல்லும் ரோட்டில் கீழக்குளம் கண்மாய்க்கு அருகில் சமண தீர்த்தங்கரர் வடிவத்தை ஒத்த ஒரு கல்சிலையானது தவக்கோலத்தில் அமைந்து உள்ளது.இவ்வூர் மக்கள்
இந்த சிலையை கள்ளவாளி சிலை என்று பெயரில் வணங்குகின்றனர்.எஸ்.டி.சேதுராஜபுரம் கிராம மக்கள் விவசாயம் ஆரம்பிக்கிற மாதங்களில் இந்த கள்ளவாளி சிலையை வணங்கி விட்டேநெல்,மிளகாய்,தோட்டபயிர்களை பயிரிடுகின்றனர்.அதே போலவே விளைச்சல் கிடைத்ததும் நெல்,மிளகாய் போன்றவற்றை கள்ளவாளிக்கு காணிக்கையாக செலுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வூரை சேர்ந்த #கோபிநாத் என்ற கல்லூரி மாணவர் இது பற்றி பேசும் போது''கமுதி முதல் திருப்புல்லாணி வரையிலான பகுதிகளில் 9 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரையில் சமண மதம் சிறப்புற்று விளங்கியதாக படித்திருக்கிறேன்.எங்கள் ஊரில் காணப்படும் இந்த கள்ளவாளி சிலையானது மகாவீரர் அல்லது ஆதிநாதராக கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.மேலும் முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் ஏ.நெடுங்குளம் என்ற பெயரில் கிராமம் ஒன்று இருந்ததாகவும் தெரிய வருகிறது.எனவே இது தொடர்பான தொல்லியல் ஆய்வுகள் நடத்துவது அவசியம்' என்றார்.
ஆனால்இது தொடர்பாக விளக்கும் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு அவர்கள், "இது சமண தீர்த்தங்கரர் அல்ல,என்றதோடு மகாவீரரின் பீடத்தில் சிங்கமும் ,ஆதி நாதருக்கு காளையும்இருக்கும்.இதில் அவ்வாறு இல்லாததால் இது மிக சமீபத்திய சிலையாக கூட இருக்கலாம்" என்கிறார்.
மேலும் கள்ளவாளி என்பதற்கு திருடன் எனவும் ஒரு அர்த்தம் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
#ஜெ.#தங்கமுனியசாமி

ஒரு கேள்வி


வறட்சியின் கோரப் பிடியில்
சிக்கி சின்னாபின்னமானது
பெருந்துயரம் .
ஆனால் நிறைந்து கொண்டு இருக்கிறது.
ஊழல் பெருச்சாளிகள் ,
மொள்ளமாரிகள்
முடிச்சவிக்கிகளால்.
பிணத்தின் நெற்றியிலும்
கூட காசு எடுத்தவனால்,
வாய்க்கரிசி கேட்பவர்களால் ,
ஆம்.நிறையவே நிறைந்து கொண்டு இருக்கிறது
அரசின் அனைத்து துறையிலும்
கடைந்தெடுத்த அயோக்கியர்களை
எம்மக்களுக்கு சேவை செய்யவென ,
எங்கெங்கிருந்தோ தூக்கி போடுகிறார்கள்
ஆகவே கனவான்களே!
இயற்கையால் வஞ்சிக்கப்பட்டவர்களின்
ஏக பிரதிநிதியாய் இறைஞ்சிக் கேட்கிறேன்..
ஒரே ஒரு கேள்வி...
தண்டனைக்குள்ளான அரசாங்க ஆபிசர்களை
ராமநாதபுரத்திற்கு பணிமாறுதல் செய்கின்றீர்களே
#உண்மையில் #தண்டனை #யாருக்கு?
துரோக வாளை கூர் தீட்டி,
சிரிப்பை அள்ளி வீசியெறிந்து,
பிள்ளைக்கறி தின்னும் 
கொலைகார குள்ளநரிக் கூட்டமொன்றின்
கால் பிடித்து நடை பழகும் அபலை
ஆட்டுகுட்டியின் நம்பிக்கை போன்றே
கோட்டி பிடித்து அலைகிறது மனம்.