Monday, August 15, 2011

SILA KELVIGAL APPAVIDAMIRUNTHU

ஒரு கேள்விக்காவது விடை தெரிந்திருந்தால்......எனது அப்பா
எண்பது வயது அப்பா
நான் குழந்தையாய் இருக்கும்போது
கோமாவில் விழுந்தஅவர் இப்போது
என்குழந்தையைப் பார்க்க எழுந்திருக்கிறார்
நாற்பது வருட எதிர்பார்ப்பு அது
நான்கு நாட்களாகிறது விடியல் பிறந்து
தனக்குள் முழ்கி இருந்த அவர்
தன்னைச் சுற்றி நடப்பதை அறிய
ஆர்வக் கோளாரில் அவரோடு
நகர் வலம் கிளம்புகிறேன்
இருவரும் தெருவில்
இறங்கி நடக்கிறோம்
பொதி சுமக்கும் கழுதைபோல
ஆள் உயர பையைத் துக்கி
பள்ளி செல்லுகிறார்கள் குழந்தைகள்
!நாற்பது பக்க ஏட்டை
நான்காய் மடித்து அதை
காற்சட்டைக்குள் சொருகி
வெறும் கையை வீசி
கல்லூரி வருகிறார்கள் மாணவர்கள்
!!ஏன்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை
? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்வழிநெடுக முளைத்து நிற்கும்
குழந்தைகள் நல மருத்துவர்கள்
பிரசவக் கால மருத்துவமனைகள்
"பிறப்பு எல்லாமே எளிதாகி இருக்குமே?" என்கிறார்"சுகப் பிரசவமே கிடையாது இப்போது!" என்கிறேன்ஏன்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை
? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்கருப்புச் சட்டையணிந்து கன்னிச்சாமியார்கள்
கடவுளுக்கு விரதமிருந்து கோவிலுக்கு வருகிறார்கள்
கருப்புச் சட்டையணிந்து கட்சிசார்பானவர்கள்
கடவுளுக்கு விரோதமாக கோசமிட்டுச் செல்கிறார்கள்
ஏன்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை
? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்"
காதலர்தினம் கொண்டாடுகிறார்களே
சுதந்திரதினம், விடுதலைதினம் போல?காதல்மனம் எதிர்ப்போர் குறைந்து போயினரா??கலப்புமணம் மறுப்போர் மறைந்து போயினரா???" என்கிறார்"உலகம் மாறவில்லை இன்னமும்!" என்கிறேன்பிறகு ஏன்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை
? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்குழம்பிப்போய் இருக்கிறார் அவர்
குதூகலமாய் மாற்ற அவரை
புதுத்திரைப்படம் கூட்டிச் செல்கிறேன்
ஆடல் காட்சியில் பனிப் பிரதேசத்தில்
ஆண்கள் அனைவரும் முழு ஆடையோடு
கம்பளியும் சேர்த்து அணிந்திருக்கிறார்கள்
!பெண்கள் வெறும் உள்ளாடையோடு
காலணிகூட இல்லாமல் ஆடுகிறார்கள்
!!ஏன்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை
? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்ஆண்கள் அனைவரும் பாடல் காட்சியில்
அவரவர் குரலில்அமைதியாகவேப் பாடுகிறார்கள்
பெண்கள் மட்டும் முக்கி திக்கித்திணறி
ஆண் குரலில் ஆர்ப்பாட்டமாய்ப் படுத்துகிறார்கள்
ஏன்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை
? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்விதியை நொந்து சோர்ந்துபோய் இருக்கிறார்
வீடு வந்து சேர்கிறோம் இருவரும்
"
பக்கத்து வீட்டுக்காரன் மிகமிகமுக்கியம்
பங்காளி சொக்காரன் சொந்தங்களைவிட!என்னை அறிமுகப்படுத்து அவர்களிடம்" என்றார்"எனக்கே அறிமுகமில்லை இன்னமும்" என்றேன்ஏன்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை
? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்"
குயில் கூவும் தோட்டம்போல
ஆரவாரமாய் இருக்கவேண்டுமே
குழந்தை குட்டியுள்ள வீடெனில்!ஆனால் இங்கே என்ன இது
கல்லறைத் தோட்டம்போல
அமைதியாய் இருக்கிறதே
?" என்கிறார்"தொலைக்காட்சி பார்ப்பதால்" என்கிறேன்ஏன்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை
? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்"அரசே மதுபானக்கடை நடத்துகிறதா?அங்கே மதுவும் ஊற்றிக் கொடுக்கிறதா??கணக்கில் வராத கள்ளப்பணத்திற்கு
காந்திக்கணக்கு என்ற பெயரா
?மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்
மிதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறதே
?"கேள்விகள்? கேள்விகள்?? கேள்விகள்???கேட்டுக் கொண்டே இருக்கிறார்.........கொஞ்ச நேரத்தில் யாரையும் கேட்க்காமலேயே
குழம்பிப் போன மனத்தோடும் முகத்தோடும்
கோமாவுக்குள் சென்றுவிடுகிறார் மறுபடியும்
நாற்பது வருடங்கள் நலமாய் இருந்தவர்
நான்கே நாட்கள் திரும்ப வந்து
இதுவரை இருந்த நிம்மதியையும்
இங்கே தொலைத்து சென்றுவிட்டார்
அவர் அப்படியே இறந்திருக்கலாமோ?மறுபடியும் இங்கே
வராமலேயே இருந்திருக்கலாமோ
 
New window
Print all
Expand all
Collapse all
Forward all
???? Reply Forward Invite kottairaja raja to chat

No comments:

Post a Comment